இந்த 9 மாவட்டங்களுக்கு நாளை கன மழை எச்சரிக்கை... வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

இந்த 9 மாவட்டங்களுக்கு நாளை கன மழை எச்சரிக்கை... வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!



Rain alert in Tamil Nadu

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை நீடித்து வருவதால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடலோர மாவட்டங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் நாளை முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Rain alert

அதை போல் வருகின்ற 7 ஆம் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களுக்கு கன மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.