கேட்டை மூடிவிட்டு கும்பகர்ணன் போல குறட்டை விட்டு தூங்கிய ரெயில்வே கேட் கீப்பர்..! கொந்தளித்த மக்கள்..!!



Railway Gate Keeper Sleeping Chengalpattu

 

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அச்சரப்பாக்கம் ரயில்வே கிராசிங் கேட்டை மூடிவிட்டு கேட் கீப்பர்  தனது அறையில் உறங்கி இருக்கிறார். ரயில் சென்று இருபது நிமிடங்களுக்கு மேலாகியும் கேட் திறக்காத நிலையில், ஆத்திரமடைந்த மக்கள் ரயில்வே கேட் கீப்பரின் அறைக்கு சென்று பார்த்துள்ளனர். 

Chengalpattu

அப்போது அவர் குறட்டை விட்டு தூங்கியதால் அதிர்ச்சியடைந்த மக்கள் கேட் கீப்பராக பணியாற்றி வந்த ஆனந்தை சுற்றி வளைத்து திட்டி தீர்த்துள்ளனர். இது தொடர்பாக ரயில்வே துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்படவே, அவர்கள் துறை ரீதியான விசாரணை நடத்தி வருகின்றனர்