ஆடி தேரோட்டத்தில் பரிதாபம்.. நிலைதடுமாறி பக்தர்களின் மீது சாய்ந்து விபத்திற்குள்ளான தேர்.. 10 பேர் படுகாயம்.!



pudukkottai-chariot-accident-10-injured

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர் கோயிலில் ஆடி திருவிழா, கடந்த 9 நாட்களுக்கு முன்னதாக கொடியேற்றதோடு தொடங்கி நடைபெறுகிறது. தினம் சிறப்பு பூஜையுடன் அம்மன் வீதிஉலா வரும் நிலையில், இன்று தேரோட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. 

இன்று தேர் வீதிஉலா தொடங்கிய நிலையில், ஊர்வலத்திற்காக தேர் 2 அடி வரும் முன்னரே பக்தர்களின் மீது ஒருபுறமாக சாய்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 10-ற்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், காயமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  

காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தேர் கிளம்பும்போது வெள்ளைக்கொடி காண்பிக்காமல் தேரை பக்தர்கள் திடீரென இழுத்தது, தேரில் பொறுத்தப்படவேண்டிய கிளாம்புகள் இல்லாதது, அதனை அதிகாரிகள் கவனிக்க தவறியது என பல குற்றசாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.