என் காதலன் சென்ற இடத்துக்கே நானும் போறேன்... கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு... கதறி துடிக்கு பெற்றோர்!! நடந்தது என்ன.?

என் காதலன் சென்ற இடத்துக்கே நானும் போறேன்... கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு... கதறி துடிக்கு பெற்றோர்!! நடந்தது என்ன.?



pollachi-college-student-committed-suicide-for-love-mat

பொள்ளாச்சி அருகே உள்ள கோலார்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் மிருதுளா(21) பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அப்போது கல்லூரி சென்று வந்த சமயத்தில் திப்பம்பட்டி பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போன் மூலமும் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிருதுளா அப்துலுடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்துள்ளார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த அப்துல் ரகுமான் கடந்த பிப்ரவரி மாதம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

pollachi

அப்துலின் தற்கொலைக்கு தான் காரணம் என்ற மன வேதனையில் நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளார் மிருதுளா. ஒரு சமயத்தில் அதிக மன அழுத்தத்திற்கு ஆளான மிருதுளா காதலன் சென்ற இடத்துக்கே நானும் செல்ல எண்ணியுள்ளார். அதன்படி சம்பவத்தினத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பாத்ரூமில் தூக்கிட்டு மிருதுளா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.‌