காவல்நிலையத்தில் 2 மணி நேரமாக சீருடையில் காம லீலை!. வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த உயர் காவல் அதிகாரி!.

காவல்நிலையத்தில் 2 மணி நேரமாக சீருடையில் காம லீலை!. வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த உயர் காவல் அதிகாரி!.


police sudpended for sexual relation in police station

திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிபவர் எஸ்.எஸ்.ஐ.யாக இருக்கும் பாலசுப்பிரமணி. இவர் கடந்த 10ம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார் பாலசுப்பிரமணி. அந்த சமயத்தில் காவல்நிலையத்தில் ஒரு பெண் போலீஸ் மட்டும் பணியில் இருந்துள்ளார்.

இந்நிலையில், எஸ்ஐ பாலசுப்பிரமணி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது 10.30 மணியளவில் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்[பொது அங்கிருந்த பெண் போலீசிடம் பேசிக்கொண்டே இருந்துவிட்டு திடீரென கட்டியணைத்து முத்தமிட்டுள்ளார்.

அப்போது, உளவுத்துறை போலீசார் ஒருவர் காவல்நிலையத்திற்கு வந்துள்ளார். அதனை பார்த்த அந்த பெண் போலீஸ்  உளவுத்துறை போலீசாரிடம், எஸ்.எஸ்.ஐ லசுப்பிரமணி தான் என்னிடம் வலுக்கட்டாயமாக நடந்துகொண்டார் என கூறினார். 

policemen

இதனையடுத்து எஸ்ஐ. பாலசுப்பிரமணியம் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எஸ்.ஐ, அப்பெண்ணின் சம்மதத்துடன் தான் எல்லாம் நடந்தது, வேண்டுமென்றால் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்யுங்கள் என கூறியுள்ளார்.

இதன்பேரில், சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது, 2 நிமிடம் 50 நொடிகள் ஓடும் வீடியோவில் அந்த பெண் போலீஸ் கொஞ்சமும் எதிர்ப்பு தெரிவிக்காமல் முழு மனதோடு அவருக்கு ஒத்துழைப்பு கொடுப்பது தெரியவந்தது. இதனால், மிக விரைவில் அந்த பெண் போலீஸ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.