மனைவி பிரிந்து சென்றதால் காவலர் எடுத்த அதிர்ச்சி முடிவு!

மனைவி பிரிந்து சென்றதால் காவலர் எடுத்த அதிர்ச்சி முடிவு!



Police men suicide for wife problem

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள தூணேரி கிராமத்தை சேர்ந்தவர் தர்மன். இவரது மனைவி சீதை அம்மாள். இவர்களது மகன் போஜராஜன் 1994 ஆம் ஆண்டு முதல் காவல் துறையில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அவருக்கு காவல்துறை ஆய்வாளராக பதவி உயர்வு கிடைத்துள்ளது.

Nilgiris

இதில் போஜராஜனுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, போஜராஜன் பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

Nilgiris

இந்த நிலையில் நேற்று முன்தினம் போஜராஜன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.