இராமேஸ்வரம் இராமநாதசாமி கோவிலில் பயபக்தியுடன் வேண்டிய பிரதமர் மோடி..!

இராமேஸ்வரம் இராமநாதசாமி கோவிலில் பயபக்தியுடன் வேண்டிய பிரதமர் மோடி..!



PM Narendra Modi pray at Ramanathaswamy Temple in Rameswaram 

 

அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாவிஷேக பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. ஜனவரி 22ம் தேதி கோவில் கும்பாவிஷேகம் பிரம்மாண்டமாக நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இதற்காக பிரதமர் நரேந்திர மோடி உண்ணாவிரதமும் இருந்து வருகிறார். தற்போது தமிழ்நாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். 

அதனைத்தொடர்ந்து, இன்று மதியம் ஸ்ரீரங்கம் ரங்கநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தவர், அங்கிருந்து ராமேஸ்வரம் சென்று ஸ்ரீ ராமநாதசாமி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்தார். 

அப்போது, பிரதமர் நரேந்திர மோடி, ராமநாத சாமி கோவிலில் பகவான் ஸ்ரீ ராமர், சீதா தேவி ஆகியோரால் வணங்கப்பட்ட லிங்கத்தின் முன் அமர்ந்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.