ஒரே நாளில் 3 தடுப்பூசி போட்ட ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள்!.. மறுநாள் அரங்கேறிய பரிதாபம்...!!

ஒரே நாளில் 3 தடுப்பூசி போட்ட ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள்!.. மறுநாள் அரங்கேறிய பரிதாபம்...!!



parents-complained-that-a-52-day-old-baby-died-after-re

திண்டுக்கல் அருகே பிறந்து 52 நாட்களே ஆன குழந்தைக்கு ஒரே நாளில் மூன்று தடுப்பூசி போட்டதால் குழந்தை இறந்ததாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயக்குமார். இவரது மனைவி சுகன்யா.‌ இவர்களுக்கு 52 நாட்களுக்கு முன் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. 45 நாட்களில் குழந்தைக்கு போட வேண்டிய தடுப்பூசியை பெற்றொர் போடாமல் இருந்துள்ளனர். 

இந்நிலையில குழந்தை பிறந்த 52-வது நாளான நேற்று ஆலம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் பிள்ளையார்நத்தம் குழந்தைகள் மையத்தில் அந்த குழந்தைக்கு மூன்று தடுப்பூசி போட்டுள்ளனர். குழந்தையின் இரண்டு தொடைகளில் இரண்டு தடுப்பூசியும், கையில் ஒரு தடுப்பூசியும் போட்டுள்ளனர். அப்போது, குழந்தை நன்றாக இருந்தாக பெற்றொர் கூறினர்.

இன்று அதிகாலை குழந்தையின் வாயிலும், மூக்கிலும் ரத்தம் வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிகிச்சைக்காக குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்ட குழந்தையின் பெற்றோர், குழந்தையின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக திண்டுக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் கூறுகையில், ஒரே நாளில் குழந்தைக்கு மூன்று தடுப்பூசி போட்டதால்தான் குழந்தை இறந்து விட்டது. ஒரு ஊசி தான் போட வேண்டும். எனவே குழந்தை இறப்பில் மர்மம் உள்ளது. எனவே இதுகுறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போது தான் குழந்தையின் உடலை வாங்குவோம் என்று கூறினர்.