ப.சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைத்தும் வெளியே வர முடியாத சூழ்நிலை!

ப.சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைத்தும் வெளியே வர முடியாத சூழ்நிலை!


p. chidambaram condional bail


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் ஆகஸ்ட் 21ல் கைது செய்தனர்.இதனையடுத்து அவர் டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து கடந்த மாதம் 30-ந் தேதி உத்தரவிட்டார். இதனையடுத்து ப.சிதம்பரம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

p chidamparam

இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்ததை அடுத்து, நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஆனால் அமலாக்கத்துறை சார்பிலும் சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதால் ஜாமின் கிடைத்தும் வெளியே வர முடியாத சூழ்நிலை உள்ளது.

அமலாக்கத்துறையின் விசாரணை ஆக்டொபர் 24ல் முடிவடைகிறது. அதன்பின் குற்றப்பத்திரிகை மீதான விசாரணை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அமலாக்கப்பிரிவு வழக்கில் அவர் ஜாமீன் பெற்றால்தான் வெளியே வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.