மகிழ்ச்சியான செய்தி.! தமிழ் வழியில் படித்தவர்களுக்கே அரசு வேலையில் முன்னுரிமை.! அசத்தலான அரசாணை.!

மகிழ்ச்சியான செய்தி.! தமிழ் வழியில் படித்தவர்களுக்கே அரசு வேலையில் முன்னுரிமை.! அசத்தலான அரசாணை.!



only-those-who-are-educated-in-the-tamil-way-are-given

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலையில் முன்னுரிமை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணிகளில் 20 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை வழங்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளிப்படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு என்று அனைத்தையும் முழுவதுமாக தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.    

தேர்வை மட்டும் தமிழில் எழுதியவர்கள், தனித்தேர்வர்களுக்கு  20% இடஒதுக்கீடு பொருந்தாது எனவும் அரசு விளக்கம் அளித்துள்ளது. கல்லூரிகளில் முழுவதுமாக தமிழ் வழியில் கல்வி பயின்றிருந்தால் மட்டுமே அரசு பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் . 

தமிழில் படித்ததற்கான கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த பிறகே இட ஒதுக்கீட்டில் நியமனம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.