விமான கட்டணத்தை மிஞ்சிய ஆம்னி பேருந்து கட்டணம்..! அதிர்ச்சியில் பயணிகள்.!

விமான கட்டணத்தை மிஞ்சிய ஆம்னி பேருந்து கட்டணம்..! அதிர்ச்சியில் பயணிகள்.!



omni-bus-ticket-increased

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை வேகம் எடுத்துள்ள நிலையில், கடந்த 10-ந்தேதி முதல் வரும் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் மே 24-ந் தேதி முதல் தளர்வுகள் இல்லாத ஒரு வார முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் முழு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ள நிலையில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு நேற்றும்(மே 22), நாளையும் 4500 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஆம்னி பேருந்துகளும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

Omni bus

இந்தஇலையில், இன்று சென்னையிலிருந்து மதுரைக்கு கடைசி பேருந்து இரவு 11 மணிக்குப் புறப்படும் எனவும், சென்னையில் இருந்து திருச்சிக்கு கடைசிப் பேருந்து இரவு 11.45 க்கு புறப்படும் எனவும், திருநெல்வேலிக்கு இரவு 8 மணிக்கும், தூத்துக்குடிக்கு இரவு 7 மணிக்கும் கடைசி பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்திருந்தார். ஆனாலும் ஆம்னி பேருந்துகள் ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயம் செய்து பேருந்துகளை இயக்குவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.