நீண்ட நாட்களுக்கு பிறகு நாளை முதல் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள்.! உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

நீண்ட நாட்களுக்கு பிறகு நாளை முதல் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள்.! உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!



omni bus start from tomorrow

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதற்கட்ட ஊரடங்கு கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக ரயில், அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த மாதம் 7-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு பேருந்து சேவை தொடங்கியது. 

அதேபோல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் ஆம்னி பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் ஓடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஊரடங்கு அமலில் இருந்த காலக்கட்டத்துக்கான சாலை வரியை அரசு ரத்து செய்தால் மட்டுமே, ஆம்னி பேருந்துகளை இயக்குவோம் என்று உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்து வந்தது.

Omni bus

அவர்களது கோரிக்கை நிறைவேறியதையடுத்து ஆம்னி பேருந்துகளை மீண்டும் இயக்குவது குறித்து உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதனையடுத்து தமிழகத்தில் நாளை 16- ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளை இயக்குவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 174 நாட்களுக்கு பிறகு நாளை முதல் தமிழ்நாடு உரிமம் பெற்ற ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.