ஓடும் பேருந்தில் பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த முதியவர்.! தட்டி தூக்கிய போலீஸ்.!

ஓடும் பேருந்தில் பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த முதியவர்.! தட்டி தூக்கிய போலீஸ்.!



old man arrest for torture to school girl

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி தினமும் பேருந்தில் பள்ளிக்கு சென்று வருவார்.

இந்தநிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் தனது கிராமத்தில் இருந்து தனியார் பேருந்தில் மாணவி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சல் சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து பேருந்தில் இருந்த சக பயணிகள் முதியவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அந்த முதியவர் மண்மலை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பதும், அவர் மாணவியிடம் சில்மிஷம் செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ராஜேந்திரனை கைது செய்தனர்.