பேருந்து படிக்கட்டில் அமர்ந்து ஆபத்தான பயணம் செய்த மூதாட்டி.! வெளியான ஷாக் வீடியோ.!

பேருந்து படிக்கட்டில் அமர்ந்து ஆபத்தான பயணம் செய்த மூதாட்டி.! வெளியான ஷாக் வீடியோ.!



old lady travelled bus steps

செங்கல்பட்டில் அரசு பேருந்தின் படிகட்டில் அமர்ந்து மூதாட்டி ஒருவர் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

செங்கல்பட்டு வண்ணாரத்தெருவைச் சேர்ந்தவர்  கமலம்மாள். 70 வயதான இவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவமனைக்கு பேருந்தில் சென்றுள்ளார். மருத்துவமனையில் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரது இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது.

இதற்காக மூதாட்டிக்கு கையில் கட்டு போட்டு சிகிச்சை அளித்துள்ளனர். இதனையடுத்து அரசு மருத்துவமனை எதிரே உள்ள பேருந்து நிலையத்துக்கு வந்த மூதாட்டி கமலம்மாள், மணப்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மாநகர பேருந்தில் ஏறி உள்ளே செல்லாமல் 2-வது படிக்கட்டிலேயே அமர்ந்தபடி சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளார்.

அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர், மூதாட்டியின் இந்த ஆபத்தான பயணத்தை தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.