ஓலா காரை புக் செய்து, டிரைவரை கழுத்தறுத்து கொன்ற மர்மகும்பல்... கொலையின் பின்னணி என்ன?.! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..! 

ஓலா காரை புக் செய்து, டிரைவரை கழுத்தறுத்து கொன்ற மர்மகும்பல்... கொலையின் பின்னணி என்ன?.! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..! 



ola-taxi-driver-kiled-by-4-members-in-chengalpatu

கொள்ளை கும்பல் ஒன்று ஓலா காரை புக் செய்து, கார் டிரைவரை கொன்று விட்டு காரை திருடி சென்ற பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை சித்தலபாக்கம் அரசங்கழனி பகுதியில் வசித்து வருபவர் அர்ஜுன். இவருக்கு திருமணமாகி ஆண் குழந்தை உள்ள நிலையில், ஓலா கால் டாக்ஸி ஓட்டி வந்துள்ளார். சம்பவ தினத்தன்று இரவு வண்டலூரில் இருந்து செங்கல்பட்டு செல்வதற்காக நான்கு பேர் கார் புக் செய்த நிலையில், காரில் அர்ஜுன் அவர்களை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.

அப்போது திடீரென நால்வரும் அர்ஜுனை கழுத்தறுத்து கொலை செய்து, உடலை ரோட்டில் வீசிவிட்டு காரை கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, அர்ஜுனின் கார் பெட்ரோல் தீர்ந்ததால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. 

Ola

பின் ஓலா டாக்ஸி புக் செய்த நம்பரை வைத்து குற்றவாளிகளான பிரசாத், திருமூர்த்தி மற்றும் குட்டி முத்து ஆகிய மூவரையும் பெரம்பலூரில் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகிய ஒருவரை தேடி வருகின்றனர். டாக்சி டிரைவர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஓட்டுனர்கள் பலரும் செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.