நிவர் புயலின் போது உதவி தேவையா? அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு... தமிழக அரசு நடவடிக்கை..!!

நிவர் புயலின் போது உதவி தேவையா? அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு... தமிழக அரசு நடவடிக்கை..!!



Nivar cyclone helpline numbers

நிவர் புயல் காரணமாக பாதிக்கப்படுவோர்களுக்கு உதவும் வகையில் அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று இரவு தீவிர புயலாக வலுப்பெற்று நாளை பிற்பகலில், காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் டெல்டா மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், புயல் கரையை கடக்கும்போது 100 முதல் 120 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த வலுவான புயல் மற்றும் கனமழை ஆகியவரை சமாளிக்க அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Nivar Cyclone

இந்நிலையில் நிவர் புயல் பாதிப்புகள் மற்றும் உதவி குறித்து அவசர கால உதவி எங்களை அரசு அறிவித்துள்ளது. மாநில அளவில் அவசர உதவி எண் 1070, மாவட்டங்கள் அளவில் 1077 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

நிவர் புயல் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னை மக்கள் 1913 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். அல்லது 044-2538 4530, 044-2538 4540 என்ற அவசர எண்களிலும் மக்கள் தொடர்புகொள்ளலாம்.