எண்னை யாராலும் எதுவும் செய்யமுடியாது! தமிழகத்தில் என்னை எப்போது இழுக்குறாங்க தெரியுமா? நித்தியின் வைரல் வீடியோ!

எண்னை யாராலும் எதுவும் செய்யமுடியாது! தமிழகத்தில் என்னை எப்போது இழுக்குறாங்க தெரியுமா? நித்தியின் வைரல் வீடியோ!



Nithiyanantha talking about tamilnadu


கடந்த 2018ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான நித்தியானந்தா அவ்வப்போது எதாவது புகார் வந்துகொண்டே உள்ளது. ஆனாலும் சமூக ஊடகங்கள் மூலமாக தனது சிஷ்யர்களுடன் நாள்தோறும் பேசி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் சிஷ்யர்களிடம் பேசிய நித்தியானந்தா, தான் உயிரோடு இருப்பதாகவும் கால பைரவர் மற்றும் சிவன் தன்னை காத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சின்ஹாநிலையில் புதிய தகவல் ஒன்றை கூறியுள்ளார் நித்தியானந்தா, 'அதில் சர்வதேச மாபியா கும்பல் தன்னை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டுவதாகவும், என்ன நடந்தாலும் அவர்களால் தன்னை எதுவும் செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழில் வாயை திறந்தாலே எதாவது தகராறு பன்றாங்க. எதையாவதை நா சொல்லிவச்சுடறேன், இவர்களுக்கு மூல லிங்கத்துக்கும் மூலவருக்கும் வித்யாசம் தெரியமாட்டிக்கிது. மேலும், தமிழகத்தில் யாருக்காவது எதாவது பிரச்னை என்றால் கவனத்தை திருப்புவதற்கு என்னைத்தான் இழுக்குறாங்க. ஆனாலும் இந்த நேரத்துலையும் சிரிக்கிறதுக்கு நம்மளாலேதான் முடியும் என கூலாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.