திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தற்கொலை.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தற்கொலை.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!



Newly married women suicide in Sivagangai

சிவகங்கை அருகே திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இழுப்பங்கொடியை சேர்ந்தவர் மாரி. இவருக்கும், 22 வயதான செல்வி என்ற பெண்ணுக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதில், மாப்பிள்ளை வீட்டில் இருந்து இளம்பெண்ணை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

sivagangaisivagangai

இந்த நிலையில் செல்வி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த காரைக்குடி போலீசார் செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதனிடையே செல்வியின் அருகில் சோதனை செய்தபோது அங்கு இருந்த ஒரு டைரியில் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் தன்னுடைய இறப்புக்கு காரணம் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் என்று செல்வி எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

sivagangai

இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் செல்வியின் கணவர் மாரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.