ஏன் இப்படி இருக்கிறாய்.? கணவரின் செயல்பாட்டால் வெறுத்துபோன புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு.!

ஏன் இப்படி இருக்கிறாய்.? கணவரின் செயல்பாட்டால் வெறுத்துபோன புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு.!



newly married women suicide

சென்னை பெரம்பூர், நீலாந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (21). இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கீர்த்தனா (21) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கீர்த்தனா சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். ராமச்சந்திரன் வேலைக்கு செல்லாமல் குறும்படம் எடுப்பதிலேயே ஆர்வம் காட்டி அதை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த கீர்த்தனா ஏன் வேலைக்கு செல்வதில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறாய் என கணவரிடம் சண்டை போட்டுவந்துள்ளார். இதன்காரணமாக தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்துள்ளது. ஒருகட்டத்தில் வெறுப்பு அடைந்த கீர்த்தனா மரச்சாமான்கள் கெட்டுப்போகாமல் இருக்க பயன்படுத்தப்படும் செல் ஆயிலை குடித்து தற்கொலைக்கு முயன்று  மயங்கிவிழுந்துள்ளார்.

Young womenமயக்க நிலையில் இருந்த கீர்த்தனாவை உடனடியாக மீட்டு ராமசந்திரன் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். பின்னர், மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கீர்த்தனா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் கணவரின் செயல்பாடுகளால் வெறுத்துபோன இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி ஒரு வருடம் ஆவதால் ஆர்டிஓ விசாரணை நடைபெறுகிறது.