திருமணமான புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை.. போலீஸ் விசாரணை.!



New married boy suicide in Covai

கோவை அருகே உள்ள அன்னூர் பகுதியில் தமிழ்வாணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலக்கியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

Covai

இதனையடுத்து சூலூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலைக்கு சென்று வந்துள்ளார். அதனால் தொழிற்சாலை அருகே வாடகை வீடு எடுத்து தனது மனைவியுடன் தங்கியுள்ளார்.

இந்த நிலையில் மனைவி கடைக்கு சென்ற நேரத்தில், தமிழ்வாணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி இலக்கியா உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

Covai

இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் தமிழ்வாணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.