தந்தை வெளியே சென்றதும்... 13 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்... போக்சோ சட்டம் பாய்ந்தது!

தந்தை வெளியே சென்றதும்... 13 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்... போக்சோ சட்டம் பாய்ந்தது!



neighbour-youth-sexually-assulted-a-13-year-old-girl-ar

கோவை மாவட்டத்தில் தனியாக இருந்த சிறுமியை வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியைச் சார்ந்த 13 வயது சிறுமி ஒரு வருத்துனது தந்தையுடன் வசித்து வந்திருக்கிறார்.

இவரது வீட்டிற்கு அருகில் மணிகண்டன் என்ற 28 வயது இளைஞர் வசித்து வருகிறார். வேலை செய்வதற்காக சிறுமியின் தந்தை வெளியே செல்லும் நேரங்களில் சிறுமியுடன் பேச்சு கொடுத்து வந்திருக்கிறார் மணிகண்டன்.

childabuse

இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று சிறுமியின் தந்தை வெளியே சென்ற பின்  தனது வீட்டிற்கு விளையாட வருமாறு சிறுமியை அழைத்து இருக்கிறார் மணிகண்டன். இதனைத் தொடர்ந்து சிறுமி அவரது வீட்டிற்கு சென்றபோது அந்த சிரிப்பு இடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு அவரை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதை வெளியே சொன்னால் சிறுமியை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார்.

ஆனாலும் சிறுமியை நடந்த சம்பவங்களை தனது தந்தையிடம் கூறி அழுதுள்ளார். இதனையடுத்து அவரது தந்தை  இது தொடர்பாக சிறுமுகை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை செய்து குற்றவாளி மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.