போதையில் தாயிடம் ரகளை... அம்மிக்கல்லை போட்டு தீர்த்து கட்டிய மகன்.!

போதையில் தாயிடம் ரகளை... அம்மிக்கல்லை போட்டு தீர்த்து கட்டிய மகன்.!



near-trichy-son-murdered-his-father-brutally-for-tortur

திருச்சி மாவட்டத்தில் மது அருந்திவிட்டு தாயை அடித்து துன்புறுத்திய தந்தையை  மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தப்பி ஓடிய மகனை காவல்துறை கைது செய்துள்ளது.

திருச்சி மாவட்டம் பாலகிருஷ்ணம்பட்டி  விஸ்வாம்பாள் சமுத்திரம் பகுதியைச் சார்ந்தவர் புகழேந்தி வயது 45. மது பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து தனது மனைவியுடன் தகராறு செய்து  அவரை கொடுமை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

drunkenfather

நேற்று மாலையும் இவர் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார் இதனை அவரது மகன் சுரேந்தர் தட்டி கேட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து தந்தை மற்றும் மகனிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பாத்திரத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்று இருக்கிறார் மகன் சுரேந்தர்.

நள்ளிரவில் அவர் வீடு திரும்பிய போது தாய் மீண்டும் அழுது கொண்டு இருந்திருக்கிறார். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த சுரேந்தர்  தனது தந்தையை  சரமாரியாக தாக்கி அவரது தலையில் அம்மிக்கல்லை போட்டுள்ளார். இந்த சம்பவத்தில் தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் புகழேந்தி . இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையை கொலை செய்து விட்டு தப்பியோடிய சுரேந்தரையும் கைது செய்திருக்கிறது காவல்துறை.