தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பரிதாப பலி.. முட்டுக்கட்டை போடுகையில் துயரம்.!

தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பரிதாப பலி.. முட்டுக்கட்டை போடுகையில் துயரம்.!



Nagapattinam Near Village Festival Chariot Wheel man Died

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல், திருசெங்காட்டுக்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில், தேரின் சக்கரம் ஏறி இறங்கியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தேரை நிறுத்த முட்டுக்கட்டை கொடுக்கும் முயற்சியில் துயரம் நடந்துள்ளது. 

தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு 2 மணிநேரம் கழித்து முட்டுக்கட்டை போடப்பட்ட நிலையில், அப்போது தீபாராஜன் என்ற இளைஞரின் மீது தேர் சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. இதனால் படுகாயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதிலும், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

முன்னதாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள களிமேடு கிராமத்தில் தேரில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், நாகப்பட்டினம் அருகே தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.