திருமணத்திற்கு அழைப்பு இல்லாததால் நண்பர்களுக்குள் தகராறு.! பரிதாபமாக போன உயிர்.! ஆலங்குடியில் நடந்த பயங்கரம்.!

திருமணத்திற்கு அழைப்பு இல்லாததால் நண்பர்களுக்குள் தகராறு.! பரிதாபமாக போன உயிர்.! ஆலங்குடியில் நடந்த பயங்கரம்.!


murder-in-alangudy

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நெம்மக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்  துப்பாக்கி முருகன். இவரது மகன் செல்வகணபதி. 24 வயது நிரம்பிய செல்வகணபதி ஓட்டுநராக இருந்துவந்துள்ளார். இவர் கடந்தவாரம்  தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது, கஞ்சாவும் பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

 பின்னர் கல்லுகுண்டுக்கரை குளத்தங்கரையில் உள்ள தண்ணீர் தொட்டி பாலக்கட்டையில் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது . இதைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் அவரை கொலை செய்யும் நோக்குடன் அரிவாளுடன் தேடி வந்துள்ளனர்.

பின்னர் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த செல்வகணபதியை அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள்  அரிவாளுடன் ஓட ஓட விரட்டி  விநாயகர் கோவில் அருகே வைத்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் செல்வகணபதி ரத்தவெள்ளத்தில் சரிந்து கிடந்துள்ளார்.

Murderபின்னர் செல்வகணபதியின் உடலை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். பின்னர் செல்வகணபதி உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செல்வகணபதியின் தாய் ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தற்போது இந்த கொலை வழக்கில் போலீசார் சசிதரன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து உள்ளனர்.  இதில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர். போலீஸ் விசாரணையில் சசிதரன் திருமணத்திற்கு செல்வகணபதியை அழைக்காததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதும், அதை தொடர்ந்து செல்வகணபதியை சக நண்பர்களுடன் சேர்ந்து சசிதரன் கொலை செய்ததும் தெரிய வந்தது.