கடலூரில் சாலையில் ஏற்ப்பட்ட திடீர் பள்ளதால் அச்சத்தில் வாகன ஓட்டிகள்.!

கடலூரில் சாலையில் ஏற்ப்பட்ட திடீர் பள்ளதால் அச்சத்தில் வாகன ஓட்டிகள்.!



Motorists in fear due to a sudden pothole on the road in Cuddalore.

கடலுார் - பண்ருட்டி சாலையில் கடலூர் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனைக்கு எதிரில் சாலையின் நடுவில் பாதாள சாக்கடை வாயிற்புழை அமைந்துள்ளது. இதன் அருகில் திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த திடீர் பள்ளத்தின் அருகே எச்சரிப்பு கூம்புகள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளம் சாலையின் நடுவில் இருப்பதால் விபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் அந்த பகுதி வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். மேலும் பள்ளத்தை சரி செய்யாமல் எச்சரிக்கை கூம்புகளை மட்டும் வைத்திருப்பது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Cuddalore

இதனையடுத்து விபத்து ஏற்படுவதை தடுக்கவும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் அறிவுறுத்துகின்றனர்.