அடுத்த அபிராமி!. விடிய விடிய பேசிய வாலிபர்!. துடிதுடிக்க 3 பிஞ்சு குழந்தைகளை கொன்ற தாய்!.

அடுத்த அபிராமி!. விடிய விடிய பேசிய வாலிபர்!. துடிதுடிக்க 3 பிஞ்சு குழந்தைகளை கொன்ற தாய்!.



mother-killed-3-children-for-mobile

கணவர் தன்னுடைய செல்போனை பிடுங்கி, மறைத்து வைத்ததால் ஆத்திரமடைந்த மனைவி தனது மூன்று குழந்தைகளையும் கொன்று ,தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

சேலம் மாவட்டம் மன்னார்காடு என்ற கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமணன். 37 வயது நிறைந்த அவர் அப்பகுதியில் கல் உடைக்கும் தொழில் செய்து வருகிறார். மேலும் இவரது மனைவி ஜெயா. இவர்களுக்கு சுமித்ரா,ஷாலினி ,வெற்றிவேல் என்ற மூன்று குழந்தைகள் இருந்தனர்.

 இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் ஜெயா மற்றும் அவரது 3 குழந்தைகளையும் காணவில்லை என லட்சுமணன் போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த போலீஸார் நேற்று கொழிஞ்சம்பட்டி  பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் ஜெயா மற்றும் அவரது 3 குழந்தைகளும் பிணமாக கிடப்பதை கண்டறிந்தனர்.

jeya

 பின் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, கடந்த சில மாதங்களாக ஜெயா செல்போனில் வாலிபர் ஒருவரிடம் பல மணி நேரமாக பேசி வந்துள்ளார். இதனை அறிந்த லட்சுமணன் ஜெயாவை கண்டித்துள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாத ஜெயா மீண்டும் அந்த வாலிபருடன் பேசி வந்துள்ளார்.

 இதனால் கோபமடைந்த லட்சுமணன்  கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜெயாவிடம் இருந்த செல்போனை பிடுங்கி மறைத்து வைத்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ஜெயா அந்த வாலிபரிடம் பேச அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் செல்போனை கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் செல்போன் கொடுக்க மறுத்துள்ளனர்.

  jeya

இதனால் வெறுப்படைந்த ஜெயா தற்கொலை செய்ய முடிவு செய்து தனது மூன்று குழந்தைகளையும்,முதலில் கிணற்றில் தள்ளி பின்னர் தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.

மேலும்  ஜெயா மற்றும் அவரது குழந்தைகளுடன் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் உறவுகளில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.