மாநில குத்துச்சண்டை போட்டியில் நரிக்குறவர் மாணவிகள் சாதனை..!

மாநில குத்துச்சண்டை போட்டியில் நரிக்குறவர் மாணவிகள் சாதனை..!



mayiladuthurai-narikuravar-girls-winning-boxing-match

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில், மயிலாடுதுறை நரிக்குறவர் மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் அருகாமையில் பல்லவராயன்பேட்டை பகுதியில் நரிக்குறவர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான, ஒருங்கிணைந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது.

இந்த நிலையில், இப்பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் கடந்த 1ஆம் தேதியன்று தஞ்சாவூரில் தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்தால் நடைபெற்ற மண்டல அளவிலான போட்டியில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளனர்.

இதில் சப்-ஜூனியர் பிரிவில் ஒரு தங்கப் பதக்கம் மற்றும் 5 வெள்ளிப் பதக்கங்களை பெற்று மாநில அளவில் தகுதி பெற்றிருக்கின்றனர். 

மேலும், கடந்த மே 6, 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு குத்துச்சண்டை கழகம் நடத்திய மாநில அளவிலான ஒரு போட்டியில் இப்பள்ளியின் மாணவி தனலெட்சுமி என்பவர் 54 முதல் 57 கிலோ எடைப்பிரிவினரில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.Mayiladuthuraiமேலும், மற்றொரு மாணவி வெண்ணிலா 36 முதல் 38 எடைபிரிவினருக்கான போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

அத்துடன் இப்போட்டியின் முடிவில் பதக்கம் வென்ற மாணவிகளையும், அவர்களுக்கு பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் ஆசைத்தம்பி ஆகியோரையும் மாநில விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் பரிசுகள் வழங்கி பாராட்டியுள்ளார்.

தொடர்ந்து மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றதன் மூலமாக நரிக்குறவ மாணவர்களுக்கு முன்னுதாரணமாக மாணவிகள் விளங்குவதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.