திருமணமான புது தம்பதி அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை!

திருமணமான புது தம்பதி அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை!



Marriage couples suicide in Chennai

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தேன்மொழி. இவர்கள் இருவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

suicide

இதனால் மன வேதனை அடைந்த தேன்மொழி கடந்த பிப்ரவரி 4ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தேன்மொழியின் உறவினர்கள் வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தையும், அரசு மருத்துவமனையின் முற்றுகையிட்டனர்.

மேலும், தேன்மொழியின் தற்கொலைக்கு காரணம் என கணவர் அருண்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த நிலையில் சென்னை கேகே நகரில் அருண்குமார் தங்கி இருந்த அறைக்கு நேற்று முன்தினம் அவரது பெற்றோர் சென்று பார்த்த போது அவரை காணவில்லை.

இதனையடுத்து உடனடியாக கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகார் அடிப்படையில் போலீசார் அருண்குமாரை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே அருண்குமார் தான் தங்கி இருந்த அறையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

suicide

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அருண்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.