இந்தா.. தென்னைமரத்துல ஒரு குத்து.. ஏணியில ஒரு குத்து.. பாரபட்சமின்றி அனைத்து சின்னத்திலும் குத்திய வாக்காளர்.!

இந்தா.. தென்னைமரத்துல ஒரு குத்து.. ஏணியில ஒரு குத்து.. பாரபட்சமின்றி அனைத்து சின்னத்திலும் குத்திய வாக்காளர்.!


man vote for all symbol

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது 74 மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.வாக்கு எண்ணிக்கையை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்காணித்தனர்.

இந்தநிலையில், விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 16வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வாக்குச்சீட்டில், வடிவேலு பட காமெடி பாணியில் நபர் ஒருவர் அனைத்து சின்னங்களுக்கும் பாரபட்சமின்றி வாக்களித்த சம்பவம் நடந்துள்ளது. வாக்குகள் எண்ணப்பட்ட போது வடிவேலு பட காமெடியை போல  “தென்னைமரத்துல ஒரு குத்து.. ஏணியில ஒரு குத்து....” என சொல்வது போல, நபர் ஒருவர் வாக்கு சீட்டில் உள்ள மாம்பழம் சின்னத்தைத் தவிர்த்து, மற்ற அனைத்து சின்னங்களுக்கும் வாக்களித்துள்ளார்.

இதனால் அது செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது. இதேபோல் இந்த மாவட்டத்தின் பல்வேறு ஒன்றியங்களில் வாக்குச்சீட்டில் உள்ள அனைத்து சின்னத்திலும் சிலர் தங்கள் வாக்கினை பதிவு செய்துள்ளது தெரியவந்தது. இதுபோன்ற வாக்குகள் செல்லாத வாக்கு என அறிவிக்கப்பட்டது.