காதலால் வந்த பிரச்சினை!! மனைவியின் அண்ணன்னு கூட பார்க்காம புதுமாப்பிளை செய்த காரியம்!! வெளியான அதிர்ச்சி பின்னணி!!

காதலால் வந்த பிரச்சினை!! மனைவியின் அண்ணன்னு கூட பார்க்காம புதுமாப்பிளை செய்த காரியம்!! வெளியான அதிர்ச்சி பின்னணி!!



man-killed-wife-brother

திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கிருபன்ராஜ். 27 வயது நிறைந்த இவர் சென்னையில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். மேலும் கிருபன் ராஜ்க்கு கிரிஜா என்ற தங்கையும் இருந்துள்ளார். அவர் கிருபன்ராஜின் நண்பனான கவியரசன் என்பவரை காதலித்து வந்துள்ளார். 

இதற்கிடையே கிரிஜாவிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பு  வீட்டை விட்டு வெளியேறி கிரிஜா கவியரசனை திருமணம் செய்து கொண்டார். இது கிருபன்ராஜ்க்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் அவருக்கும் கவியரசனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

dead

இந்த நிலையில் சென்னையில் இருந்து விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த கிருபன்ராஜ் நேற்று கவியரசன் வீட்டு வழியாக சென்றபோது கவியரசனும், அவரது இரு சகோதரர்களும் வழிமறித்து அவருடன் சண்டை போட்டுள்ளனர். பின்னர் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் பாதி வழியிலேயே கிருபன்ராஜ் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள கவியரசன் மற்றும் அவரது சகோதரர்களை தேடி வருகின்றனர்.