என் காதுல அப்படியொரு குரல் கேட்டுச்சு.. கோவிலுக்குள் பெட்ரோல் வெடிகுண்டு வீசி கைதான நபர்.! பரபரப்பு வாக்குமூலம்!!

என் காதுல அப்படியொரு குரல் கேட்டுச்சு.. கோவிலுக்குள் பெட்ரோல் வெடிகுண்டு வீசி கைதான நபர்.! பரபரப்பு வாக்குமூலம்!!



man-explain-to-police-why-throw-petrol-bomb-on-temple

சென்னை பாரிமுனை கொத்தவால் சாவடியில் அமைந்துள்ள வீரபத்திரசாமி கோவிலில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 36 வயது நிறைந்த  முரளி கிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது வெடிகுண்டு வீசியது குறித்து பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அதில் அவர், நான் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததால் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தேன். மேலும் மதுவிற்கு அடிமையாகி தினமும் குடித்து வந்தேன். இந்நிலையில் எனது காதில்" வீட்டின் மேலேயிருந்து குதித்து விடு, எப்படியாவது தற்கொலை செய்து கொள், இறந்து விடு என குரல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. அதனாலேயே 24 மணி நேரமும் குடித்து வந்தேன். இதற்காக சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு சென்றாலும் அங்கு அனுமதிக்கவில்லை.

temple

இந்நிலையில் உயிரிழந்து விடலாம் என்று எண்ணிய நான் பெட்ரோல் வெடிகுண்டு வாங்கி வந்து,  பல ஆண்டுகளாக வழிபட்டும் எனது வேண்டுதலை நிறைவேற்றாத வீரபத்திரர் கோவிலில் வீசி விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என திட்டமிட்டேன். அவ்வாறு மது போதையில்  கோவிலுக்குள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு, தற்கொலை செய்து கொள்ள நினைத்தபோது அருகிலிருந்தவர்கள் என்னை பிடித்து போலீசில் ஒப்படைத்துவிட்டனர் என கூறியுள்ளார்.