பெண் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்த நபர்.. வீடியோவை வைத்து பின் அவர் செய்த காரியம்.. அதிர்ச்சி சம்பவம்

பெண் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்த நபர்.. வீடியோவை வைத்து பின் அவர் செய்த காரியம்.. அதிர்ச்சி சம்பவம்


man-arrested-who-take-video-of-women-take-bath

பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளன்னர்.

மதுரை மாவட்டம் நாகமலை அடுத்துள்ள சின்னக்கண்ணு நகரை சேர்ந்தவர் ரமேஷ் என்ற இளைஞர். இவர் அதே பக்கத்தில் வசித்துவரும் உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் குளிப்பதை அவருக்கு தெரியாமல் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

பின்னர் அந்த வீடியோ பதிவை உமாவிடம் காண்பித்து, தன்னிடம் பேசி பழக்க வேண்டும் எனவும், தனது ஆசைக்கு இணங்கவேண்டும் வேண்டும் எனவும் அந்த வீடியோவை காண்பித்து அடிக்கடி அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அந்த பெண் ஒரு கட்டத்தில் இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதி காவல் நிலையத்தில் ரமேஷ் மீது பாலியல் புகாரளித்துள்ளார்.

இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் ரமேஷை கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் குற்றம் செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து அவரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.