மாமியார் கொடுத்த ஜூஸ்ஸை நம்பி குடித்த மருமகள்..! பின்னர் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்...

மாமியார் கொடுத்த ஜூஸ்ஸை நம்பி குடித்த மருமகள்..! பின்னர் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்...


Mamiyar kodutha juice nambi kuditha marumagaluku nigaltha athirchi sambavam

களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்பின் ஷைனி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் கணவருடன் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். அதனை அடுத்து ஜாஸ்மின் ஜெபராஜ் என்பவரை 2வது திருமணமாக கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துள்ளார். 

திருமணமாகி சில நாட்கள் தம்பதியினர் இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்துள்ளனர். அதன்பிறகு குழந்தை மற்றும் மனைவியை ஜெபராஜ் மற்றும் அவரது பெற்றோர் சேர்ந்து கொடுமைப்படுத்த ஆரம்பித்து விட்டனர். ஒரு நாள் இரவு நேரத்தில் ஜாஸ்மினுக்கு அவரது மாமியார் ஜூஸ் கொடுத்துள்ளார். 

அதனை ஜாஸ்மினும் நம்பி குடித்துள்ளார். அந்த ஜூஸ்ஸை குடித்த சில மணி நேரத்திலேயே மயங்கியுள்ளார். அதன் பிறகு ஜெபராஜ் தனது மனைவிக்கு மருந்தில்லா ஊசியின் மூலம் ஜாஸ்மினின் இடுப்பில் 2 முறை குத்தியுள்ளார். காலையில் ஜாஸ்மின் எழுந்திருக்கும் போது இடுப்பு வலி ஏற்ப்பட்டுள்ளது. 

Juice

ஆனால் அதனை தாங்கி கொண்டு வீட்டு வேலைகளை பார்த்துள்ளார். பின் கணவருடன் தகராறு ஏற்ப்பட்டதை அடுத்து தனது தாய் வீட்டிற்கே சென்றுள்ளார் ஜாஸ்மின். அப்போது அவரது உடல் நிலை சரியில்லாமல் போகவே மருத்துவமனைக்கு சென்றுள்ளார். 

அப்போது தான் சில திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது ஜெபராஜ் தனது மனைவியை கொலை செய்யும் நோக்கில் மருந்தில்லா ஊசியை செலுத்தி கொலை செய்ய முயற்சித்தது தெரியவந்துள்ளது. அதாவது இரவில் மாமியார் கொடுத்த ஜூஸ்ஸை குடித்ததால் மயக்கமான ஜாஸ்மினின் உடலில் வேறும் காற்று நிரப்பிய ஊசியை செலுத்தியுள்ளனர். 

அதன்மூலம் ஜாஸ்மினுக்கு மாரடைப்பு ஏற்ப்பட்டு இறந்து விடுவால் என எண்ணி கொலை முயற்சியில் ஈடுப்பட்ட சம்பவம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் மெர்லின் ஜெபராஜ், மாமனார் சவுந்தர்ராஜ், மாமியார் ஜெஸ்டின் பாய் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.