இந்தியாவே அதிர்ச்சி.. 11 வயது சிறுமி 9 பேரால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. வெறிச்செயலால் துடித்துப்போன சிறுமி.!

இந்தியாவே அதிர்ச்சி.. 11 வயது சிறுமி 9 பேரால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. வெறிச்செயலால் துடித்துப்போன சிறுமி.!


Maharashtra Nagpur 11 Aged Minor girl Gang Raped by 9 Persons

11 வயது சிறுமி 9 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பயங்கரம் மஹாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர், அர்மிடு டவுனில் 11 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமியின் பெற்றோர் இருவரும் கூலித்தொழிலாளர்கள் என்பதால், காலை வேளைக்கு சென்றால் பின்னர் மாலையில் வீடு திருப்புவது வழக்கம். இடையில் சிறுமி வீட்டில் தனியாக இருந்து வருகிறார்.

சிறுமியின் அண்டை வீட்டார்கள் ரோஷன் கர்களின்கர் (வயது 29), பாடல் லண்டே (வயது 24), ஷுபம் டாமேடு (வயது 25), கஜானன் முர்ஸ்கர் (வயது 40), பிரேம்தாஸ் காதிபந்தே (வயது 38), ராகேஷ் மஹாகல்க்கர் (வயது 24), கோவிந்த நாடே (வயது 22), ஸுரபி ரிதே (வயது 22), நிதேஷ் பியூகாட் (வயது 30), ப்ரடும்னா கருக்கர் (வயது 22), நிகில் னருளே (வயது 22). 

இவர்களில் ரோஷன் சிறுமி தனிமையில் இருப்பதை தனக்கு சாதகமாக்கி, கடந்த ஜூன் 19 ஆம் தேதி தனது நண்பன் பாடலுடன் சேர்ந்து 11 வயது சிறுமியை வீடுகுபுந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இந்த விஷயம் அக்கம் பக்கத்தில் இருந்த பிற காம எண்ணம் கொண்டவர்களுக்கும் தெரியவந்துள்ளது. 

maharashtra

இப்படியாக சிறுமியை தனித்தனியே என 9 கொடூரர்கள் பாலியல் பலாத்காரம் செய்து சித்ரவதை படுத்தியுள்ளனர். மேலும், இதனை வெளியே கூறினால் குடும்பத்தோடு கொலை செய்திடுவோம் என்றும் மிரட்டி இருக்கின்றனர். ஆட்கள் இல்லாத நேரம் சிறுமியின் அண்டை வீட்டார் அதிகம் நடமாட, அக்கம் பக்கத்தினருக்கு இது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதனையடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சிறுமியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் பேரதிர்ச்சி தகவல் வெளியானது. பலாத்காரம் செய்த காம கொடூரர்கள் தனக்கு தேவையானது கிடைக்கப்பெற்றதும் பணமும், சாக்லேட்டுமாக வீசிவீட்டு வந்த பதைபதைப்பு தகவலும் வெளியானது. 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ரோஷன், பாடல், ஷுபம், கஜானன் ஆகியோரை கைது செய்தனர். பிரேம்தாஸ் உட்பட எஞ்சிய பிறரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நாடெங்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.