#வீடியோ: தமிழக லாரியை தாக்கி, ஓட்டுனரை அடித்த கன்னட ஆம்னி பேருந்து ஓட்டுநர், கிளீனர் கைது.!

#வீடியோ: தமிழக லாரியை தாக்கி, ஓட்டுனரை அடித்த கன்னட ஆம்னி பேருந்து ஓட்டுநர், கிளீனர் கைது.!



Krishnagiri Shoolagiri NH Suraj Travels Bangalore Omni Bus Driver Attacks TN Lorry

மலைப்பாங்கான பகுதியில் லாரி பொறுமையாக சென்ற  நிலையில், தங்களின் வாகனத்திற்கு வழிவிடவில்லை என்று கூறி கன்னட ஓட்டுநர், கிளீனர் தமிழகத்து ஓட்டுனரை சூளகிரியில் வைத்து தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை, மேற்கு கிருஷ்ணப்பா தோட்டம் பகுதியை சார்ந்தவர் சண்முகம் (வயது 48). இவர் கண்டைனர் லாரி ஓட்டுநராக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி கண்டைனர் லாரியை இயக்கி சென்றுள்ளார். 

இந்த லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள அழகுபாவி கிராமம் அருகே சென்றுள்ளது. அது, மலைப்பாங்கான பகுதி என்பதால் ஏற்றம் உள்ள சாலையில் வாகனம் மெதுவாக சென்றுள்ளது. 

இதன்போது, சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சுராஜ் என்ற பெயரை கொண்ட தனியார் ஆம்னி பேருந்தும் பயணித்துள்ளது. பேருந்துக்கு லாரி வழிவிடவில்லை என்று கூறப்படுகிறது. 

chennai

இதனால் ஆத்திரமடைந்த ஆம்னி பேருந்து ஓட்டுநர் மற்றும் கிளீனர், லாரிக்கு முன்னால் சென்று பேருந்தை நிறுத்தி, லாரி ஓட்டுனரை இறங்கி வந்து தாக்கி, லாரியின் கண்ணாடியை கல்லால் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். 

கன்னட ஓட்டுனர்களின் இந்த கொடூரத்தை அங்குள்ளவர்கள் வீடியோ எடுத்தவாறே, நீங்களும் ஓட்டுநர் thane இப்படி நடந்துஇகோணோடால் எப்படி? என்று தமிழிலும், கன்னட மொழியிலும் பேசி கண்டித்துள்ளனர். 

லாரி ஓட்டுனரை தாக்கிய பேருந்தின் ஓட்டுனரும், கிளீனரும் பேருந்தை இயக்கி சென்றுள்ளனர். இந்த வீடியோ வைரலாக நிலையில், வீடியோ குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், லாரி ஓட்டுனரை தாக்கி கண்ணாடியை உடைத்த ஆம்னி பேருந்து ஓட்டுநர் சிக்கே கவுடா (வயது 24), கிளீனர் பிரசாந்த் (வயது 25) ஆகியோரை கைது செய்தனர்.