அதிவேகத்தில் வளைவில் திரும்பி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.. 10 பேர் படுகாயம்.!

அதிவேகத்தில் வளைவில் திரும்பி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.. 10 பேர் படுகாயம்.!


Krishnagiri Perigai to Shoolagiri Private Bus Accident 10 Injured

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிகை நகரில் இருந்து சூளகிரி நோக்கி தனியார் பேருந்து பயணித்தது. இந்த பேருந்தில் 25 பயணிகள் இருந்த நிலையில், பேருந்தை சூளகிரியை சேர்ந்த ஓட்டுநர் கார்த்திக் (வயது 24) இயக்கியுள்ளார். 

இந்நிலையில், பேருந்து அத்திமுகம் பகுதியில் உள்ள வளைவில் திரும்பும் சமயத்தில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 

Krishnagiri

இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 10 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடையவே, விபத்து குறித்து தகவல் அறிந்து சென்ற காவல் துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுவாக தனியார் பேருந்துகள் தரமான வாகன பராமரிப்பு முறையால் அதிவேகத்தில் செல்வது இயல்பாகியுள்ள நிலையில், அதனால் விபத்துகள் ஏற்படுவதும் வாடிக்கையாகியுள்ளன.