கலைஞர் கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை...

கலைஞர் கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை...



karunanidhi-5-th-anniversary-tribute-to-cm-mkstalin

திமுகவின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

மேலும் அண்ணா சாலை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையில் இருந்து தொடங்கிய அமைதிப் பேரணியானது சென்னை மெரினா நினைவிடத்தில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை சென்றனர். இந்த அமைதி பேரணியில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அண்ணா நினைவிடத்திற்கும் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சரும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலைஞர் நினைவிடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.