இளம்பெண்ணிடம் பழகி, வீடியோ எடுத்து சீரழித்த கொடூரன்.. நண்பர்களுக்கும் ஆ., வீடியோவை பகிர்ந்து மிரட்டல்.!

இளம்பெண்ணிடம் பழகி, வீடியோ எடுத்து சீரழித்த கொடூரன்.. நண்பர்களுக்கும் ஆ., வீடியோவை பகிர்ந்து மிரட்டல்.!



Kanyakumari Kuzhithurai Woman Sexual Abused Taking Video

இளம்பெண்ணிடம் நட்பாக பழகி, அவருடன் நார்மல் வீடியோ கால் பேசி ஆபாசமாக சித்தரித்து வாலிபன் அவரை கற்பழித்து, நண்பர்களுக்கும் வீடியோ பகிர்ந்த கொடூரம் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை, இடைக்கோடு பகுதியை சார்ந்த 19 வயது இளம்பெண், அங்குள்ள கல்லூரியில் மூன்றாம் வருடம் பயின்று வந்துள்ளார். 

மாணவி ஓய்வு கிடைக்கும் நேரத்தில் மாதாந்திர ஏலசீட்டு நடத்தி வந்த நிலையில், அவருக்கு பண நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பணநஷ்டத்தை ஈடு செய்வதற்கு, அப்பகுதியை சார்ந்த வாலிபரிடம் உதவி கேட்டுள்ளார். 

வாலிபரும் மாணவிக்கு உதவி செய்வதாக தெரிவித்து, அடிக்கடி அவருடன் செல்போனில் பேசி வந்துள்ளார். மாணவியை தனது காதல் வலையில் வீழ்த்த நினைத்த வாலிபர், மாணவியிடம் வாட்ஸப்பில் பேச தொடங்கி, பின்னாளில் வீடியோ கால் செய்து பேசியுள்ளார். 

kanyakumari

மாணவியும் சகோதரத்துவ முறையில் பேசி வந்த நிலையில், வாலிபன் வீடியோ கால் பேசுவதை பதிவு செய்து ஆபாசமாக சித்தரித்து மாணவியிடம் அதனை காண்பித்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

இந்த வீடியோவை நண்பர்களுக்கும் வாலிபர் பகிரவே, அவர்களும் மாணவியை மிரட்டி தங்களுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தியுள்ளனர். இதனால் பயந்துபோன மாணவி, மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரை ஏற்ற காவல் துறையினர், 4 வாலிபர்களின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.