மின்சாரம் தாக்கி தாய், மகன், 8 மாத கர்ப்பிணி மகள் பரிதாப பலி: ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு சோகம்..!

மின்சாரம் தாக்கி தாய், மகன், 8 மாத கர்ப்பிணி மகள் பரிதாப பலி: ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு சோகம்..!



Kanyakumari Electrode Attack 3 Died Inculding Pregnant Woman 

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆற்றூர், தோப்புவிளை கிராமத்தை சேர்த்தவர் ஷியாம். இவரின் வீட்டு மேற்கூரையில், சம்பவத்தன்று பெய்த காற்று-மழை காரணமாக மின்வயர் அறுந்து விழுந்துள்ளது. 

இதனை அறியாத ஷியாம் மேற்கூரையை கம்பியால் நகர்த்தி இருக்கிறார். மேற்கூரை இரும்பினால் செய்யப்பட்டது ஆகும். அவர் கம்பியை உபயோகம் செய்து அதனை நகர்த்தி இருக்கிறார். 

இதனால் அவரின் உடலில் மின்சாரம் பாய்ந்த நிலையில், அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த தாய் ஜெயசித்ரா, சகோதரியான 8 மாத கர்ப்பிணி ஆதிரா பதற்றத்தில் செய்வதறியாது ஷியாமை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். 

இந்த துயரத்தில் மூவரின் மீதும் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினர் மற்றும் உள்ளூர் மின்வாரிய அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மின்சாரத்தை துண்டித்தனர். பின் அவர்களின் உடல் காவல் துறையினரால் பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டது.