இதை மட்டும் செய்தால் போதும்.! நாம் வெற்றிபெறுவது உறுதி.! கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு.!

இதை மட்டும் செய்தால் போதும்.! நாம் வெற்றிபெறுவது உறுதி.! கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு.!


kamal hasan election canwash

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் எனப் பல முனை போட்டி நிலவுகிறது. 

இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மதுரையில் முதல் கட்டமாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அதன்பிறகு பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

kamal

இந்தநிலையில் கமல்ஹாசன் நேற்று 4-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை சேலத்தில் தொடங்கினார். நேற்று கார் மூலம் சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதிக்கு வந்தார். அங்கு மக்களிடையே பேசுகையில், இங்கு திரண்டிருக்கும் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டமன்ற தேர்தலில் ஒரு மாற்றத்தை உருவாக்க தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள் என்பதை உங்களது முகமும், ஆசியும் மீண்டும், மீண்டும் வலியுறுத்துகிறது என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், இங்கு கூடியிருக்கும் தொண்டர்கள் அனைவரும் ஆளுக்கு 100 நபர்களை சந்தித்து கூறினாலே போதும் நாளை நமதே. நம் கதை தொடங்கும், அவர்களது கதை முடியும். இது நிச்சயம் நடக்கும் என நம்புகிறேன். ஊர் கூடி தேர் இழுத்தால் நாளை நமதே, நிச்சயம் நமதே என தெரிவித்தார்.