விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து நாசாவுக்கு உதவிய தமிழக இளைஞருக்கு கமல்ஹாசன் நேரில் வாழ்த்து!

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து நாசாவுக்கு உதவிய தமிழக இளைஞருக்கு கமல்ஹாசன் நேரில் வாழ்த்து!



Kamal appriciate to subramaniyan

 

 

நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்ய சென்ற விக்ரம் லேண்டர் தரையிறங்க முற்பட்ட போது விக்ரம் லேண்டர் மோதிய பகுதியை நாசா கண்டறிந்து புகைப்படம் வெளியிட்டு உள்ளது.

சந்திரயான்2 விண்கலம் மூலம் நிலவின் தென் துருவத்தை ஆராய இஸ்ரோ சார்பில் விக்ரம் லேண்டர்‌ அனுப்பப்பட்டது. ஆனால் அது நிலவில் தரையிரங்க 2 கிலோ மீட்டர் தொலைவே இருந்த நிலையில், லேண்டர்‌ உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதனையடுத்து பின் லேண்டர் குறித்த எந்த தகவலும் இஸ்ரோவுக்கு கிடைக்கவில்லை. பல்வேறு முயற்சிகளுக்குப்பின், விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை என இஸ்ரோ அறிவித்தது. இதனைத்தொடர்ந்து இஸ்ரோ, நாசாவுடன் இணைந்து விக்ரம் லேண்டரை தேடத் தொடங்கியது.

இதனையடுத்து விக்ரம் லேண்டரின் பாகங்கள் கண்டுபிடித்து புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. இதற்கு மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் தான் நாசாவுக்கு உதவினார் என்பது தெரியவந்தது. 

அதனை நாசாவின் எல்.ஆர்.ஓ. ஆர்பிட்டர் கேமரா விஞ்ஞானிகள் குழு ஆராய்ந்து சண்முக சுப்பிரமணியனின் கண்டுபிடிப்பு சரிதான் என உறுதி செய்தது.  சண்முக சுப்பிரமணியன் கண்டுபிடித்துள்ள விக்ரம் லேண்டர் சிதைவு இடங்கள் ஆகியவற்றை காட்டும் படத்தையும் நாசா வெளியிட்டது.

இதனையடுத்து, சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழக இளைஞர் மதுரையை சேர்ந்த  சண்முக சுப்பிரமணியனை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.