புருஷனே மூடிக்கிட்டு போயிட்டான் நீ என்ன கொம்பா?!: கள்ளக்காதலனை ஏவி கள்ளக்காதலனை போட்டுத்தள்ளிய நவீன பெண்..!

புருஷனே மூடிக்கிட்டு போயிட்டான் நீ என்ன கொம்பா?!: கள்ளக்காதலனை ஏவி கள்ளக்காதலனை போட்டுத்தள்ளிய நவீன பெண்..!



It was revealed that her cheating partner, who was interfering with her cheating, had arranged it with another cheating lover.

சென்னை, சாலிகிராமம் பகுதியில் உள்ள சாரதாம்பாள் தெருவில் வசித்து வருபவர் சவுந்தர்யா. கோடம்பாக்கம் மண்டலம் 132 வது வார்டில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து 2 மகன்களுடன் வசித்து வருகிறார். மேலும் அவர்களுடன் சவுந்தர்யாவின் அக்காள் மகன் ஒருவரும் தங்கி உள்ளார்.

இந்த நிலையில், சவுந்தர்யாவுக்கு தனது கணவரின் நண்பரான விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த விஜய் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் கடந்த சில மாதங்களாக ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர்

இதற்கிடையே நேற்று இரவு சவுந்தர்யாவின் வீட்டில் விஜய் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாலிகிராமம் காவல் நிலைய ஆய்வாளர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் மற்றும் காவலர்கள் விரைந்து வந்து விஜய்யின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் சவுந்தர்யாவுக்கு பிரபு என்பவருடன் கள்ளக்காதல் இருந்ததும், இதற்கு விஜய் எதிர்ப்பு தெரிவித்து வந்ததும் தெரியவந்தது. ஒரே நேரத்தில் இருவருடன் சவுந்தர்யாவுக்கு கள்ளக்காதல் இருந்ததால், அவர்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த விஜய்யை, அவரது கள்ளக்காதலி சவுந்தர்யா தனது மற்றொரு கள்ளக்காதலன் பிரபுவுடன் சேர்ந்து தீர்த்து கட்டி இருப்பது தெரியவந்தது.