மீண்டும் ஒரு ராமானுஜம்; சீனாவில் சாதனை புரிந்த தமிழன்; குவிந்து வரும் பாராட்டு.!
மீண்டும் ஒரு ராமானுஜம்; சீனாவில் சாதனை புரிந்த தமிழன்; குவிந்து வரும் பாராட்டு.!
சீனாவில் இரண்டாவது முறையாக சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருதை பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஐசக் தேவகுமாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் கிருஷ்ணம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் ஐசக். இவருடைய மகன் தேவகுமார், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சீனாவில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
மாணவர்களுக்கு எளிமையாகவும் விரைவாகவும் கணிதத்தைக் கற்பிப்பதில் சிறந்து விளங்கியுள்ளார் தேவகுமார். இதனால் 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருதைப் பெற்றுள்ளார். இவர் 2016ஆம் ஆண்டும் இவ்விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது முறையாக இவ்விருதை பெறும் ஐசக் தேவகுமார் "எனக்கு இந்த கற்பிக்கும் திறனை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி" என்று கூறியுள்ளார்.