மங்களூரை உலுக்கிய குக்கர் குண்டு வெடிப்பு!!.. தானே முன்வந்து பொறுப்பேற்ற தீவிரவாத அமைப்பு..!

மங்களூரை உலுக்கிய குக்கர் குண்டு வெடிப்பு!!.. தானே முன்வந்து பொறுப்பேற்ற தீவிரவாத அமைப்பு..!



IS claimed responsibility for blasts in Coimbatore and Mangalore.

கோவை, மங்களூருவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

கடந்த வருடம், கர்நாடக மாநிலம், மங்களூரில் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 

இதில் முகமது ஷாரிக் என்பவர் குக்கர் குண்டு தயாரித்து எடுத்துச்சென்றார். அவரின் வீட்டிலிருந்து வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தும், பல பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முகமது ஷாரிக்குடன் தொடர்பில் இருந்ததாக, ஊட்டியில் ஒருவரும், கர்நாடக மாநிலம் மைசூரில் இருவர், மங்களூரில் ஒருவர் எனறு, நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

60-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கோவை, மங்களூர் குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.