மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.! மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை.!

மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.! மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை.!



incentives-for-medical-staff

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்கள பணியாளர்கள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வருகின்றனர். அரும்பணியாற்றி வரும் மருத்துவர்கள் சிலர் இதனால் தங்களது உயிரை அர்ப்பணிக்கும் கோரமான சம்பவம் நிகழ்ந்து வருகிறது. 

இந்தநிலையில், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், ஆய்வுக்கூடப் பணியாளர்கள், சி.டி.ஸ்கேன் பணியாளர்கள், அவசர மருத்துவ ஊர்தி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டும் வகையில் அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

MK Stalin

ஏப்ரல்,மே, ஜூன் ஆகிய மூன்று மாத காலத்திற்கு மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும், செவிலியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும், இதரப் பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

மேலும், கொரோனா சிகிச்சையின் போது தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.