33 வயது பெண்ணுக்கு எமனான துப்பட்டா; இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி நேர்ந்த சோகம்.! பெண்களே உஷார்.!



in viluppuram gingee 33 year old girl dies scarf struck into bike wheel

இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வோர் ,  துப்பட்டா அணிந்தால் மிகுந்த கவனத்துடன் பயணிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு. 

வேலூர் மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலம் பகுதியில் அசித்து வருபவர் தஸ்தகீர். இவரின் மகன் ஜம்சித் (வயது 36). இவருக்கு திருமணம் முடிந்து, 33 வயதுடைய தஹீரா பானு என்ற மனைவி இருக்கிறார். நேற்று முன்தினத்தில் இவர்கள் திண்டிவனத்தில் நடைபெற்ற உறவினரின் திருமண விழாவில் கலந்துகொள்ள சென்றுள்ளனர். 

துப்பட்டா சிக்கி துயரம் 

பின் மதியம் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் சொந்த ஊர் திரும்பிய நிலையில், செஞ்சி, காந்தி நகர் பகுதியில் வந்துகொண்டு இருந்தனர். அப்போது, பானு அணிந்திருந்த துப்பட்டா இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியுள்ளது. இதனால் நிலைதடுமாறி விழுந்தவர், தலையில் படுகாயத்துடன் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: தனிமையில் இருந்த ஜோடி.. அண்ணா பல்கலை., பாணியில் 2 இளைஞர்கள் அடாவடி., அதிரடி கைது.!

Viluppuram

பெண் மரணம் 

பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெண்மணி,  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக செஞ்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அவரின் குடும்பத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியையும்,  சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து மூன்றரை வயது சிறுமி பலி.. விழுப்புரத்தில் சோகம்.!