அச்சச்சோ... ஒத்த கம்மலுக்காக போன உசுரு.! உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு.!



in-vellore-district-a-woman-wa-murdered-and-her-earings

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள கிராமத்தில்  அரை பவுன் கம்மளுக்காக 50 வயது பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கொலையாளிகளை விரைவாக கைது செய்யக்கோரி  உறவினர்கள்  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள சாத்கர்  என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி வளர்மதி(50). இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கடந்த ஆண்டு தனது கணவர் இறந்துவிட்ட நிலையில்  குடும்ப பொறுப்புகளை ஏற்ற வளர்மதி  மூன்று ஆடுகளை தனியார் நிலங்களில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று தனது குடும்பத்தை நடத்தி வந்தார்.

tamilnadu

இந்நிலையில் நேற்று மதியமும் வழக்கம் போல ஆடுகளை  மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் வளர்மதியின் குடும்பத்தினர் அவரைத் தேடி வந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர்  வளர்மதி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்துவிட்டு ஊருக்குள் வந்து தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினரும்  ஊர் பொதுமக்களும் அப்பகுதியில்  குவிந்தனர்.

tamilnadu

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த வளர்மதியின் காதுகளும் அறுத்து வீசப்பட்டிருந்தன. ஆனால் அவற்றில் இருந்த கம்மலை திருடி சென்று இருக்கின்றனர்.  இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி புனித பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இவரது கொலை  கம்மலுக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் கொலையாளிகளை விரைவாக பிடிக்கக் கோரி வளர்மதி உறவினர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டதால்   அப்பகுதியில் பதட்டம் நிலவியது.