கல்விக்கட்டணத்தை கேட்டு நெருக்கடி, தகாத பேச்சு: திருச்சியில் கல்லூரி மாணவி தற்கொலை.!

கல்விக்கட்டணத்தை கேட்டு நெருக்கடி, தகாத பேச்சு: திருச்சியில் கல்லூரி மாணவி தற்கொலை.!



in Trichy Irungalur Nursing College Girl Sathya Preethi Suicide 

 

திருச்சி மாவட்டத்தில் உள்ள இருங்கலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் செவிலியர் கல்லூரியில் பயின்று வரும் மாணவி சத்தியப்பிரீத்தி (வயது 20). 

இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையை சேர்ந்தவர் ஆவார். தற்போது படிப்புக்காக கல்லூரி விடுதியில் தங்கியிருந்தவாறு பயின்று வருகிறார். இவரின் தந்தை முருகேசன். 

இந்நிலையில், நேற்று மாணவி பிரீத்தி, தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகத்தினர் பெற்றோர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவி ப்ரீத்தியிடம் கல்லூரி நிர்வாகம் கல்வி கட்டணம் செலுத்தக்கூறி நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 

மேலும், நிர்வாகம் மாணவியை அவதூறாக பேசி, தகாத வார்த்தையால் திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தகவலை மாணவியுடன் பயின்று வரும் சக மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.