தூக்கில் தொங்கிய மனைவியின் சடலத்தை கண்டு கதறி அழுத கணவர்! விசாரணையில் அடுக்கடுக்காக அம்பலமான அதிர்ச்சி உண்மைகள்!

தூக்கில் தொங்கிய மனைவியின் சடலத்தை கண்டு கதறி அழுத கணவர்! விசாரணையில் அடுக்கடுக்காக அம்பலமான அதிர்ச்சி உண்மைகள்!


husband-killed-wife-for-second-wife

தேனி மாவட்டம் போடியில் வசித்து வந்தவர் முனீஷ்வரன். இவர் ஒரு ராணுவ வீரர் ஆவார். இவருக்கு  கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சுப்புலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. மேலும்  இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். முனீஸ்வரன் ராணுவத்தில் வேலை பார்த்து வந்ததால், சுப்புலட்சுமி தனது பிள்ளைகளுடன் மாமனார் மற்றும் மாமியாருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் முனீஸ்வரன் விடுமுறைக்காக ஊருக்கு வந்த நிலையில் சுப்புலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து தனது மனைவி குடும்ப பிரச்சினை காரணமாக தூக்கில் தொங்கி இறந்து விட்டதாக முனீஸ்வரன் அனைவரிடமும் கூறி சடலத்தின் முன்பு கதறி அழுதுள்ளார். ஆனால் இதற்கிடையில் தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சுப்புலட்சுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Murder

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் சுப்புலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சுப்புலட்சுமியின்  பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைதொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில்,  முனீஸ்வரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும் அப்பெண் கர்ப்பமான நிலையில் அவருக்கு வளைகாப்பு  நடத்த முனீஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் திட்டமிட்டநிலையில், இது சுப்புலட்சுமிக்கு தெரியவந்து பெரும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முனீஷ்வரன் சுப்புலட்சுமியின் கழுத்தை துண்டால் இறுக்கி கொலை செய்துவிட்டு, பின்னர் யாருக்கும் சந்தேகம் வராமல் தூக்கிட்டு தற்கொலை கொண்டதுபோல் தொங்கவிட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.