மனைவியின் கை கால்களை கட்டிப் போட்டு சுத்தியலால் அடித்தே கொன்ற கணவன்..! அதுமட்டுமே..? பின்னர் அவரும்..! நடுங்க செய்யும் கொடூரம்...!

மனைவியின் கை கால்களை கட்டிப் போட்டு சுத்தியலால் அடித்தே கொன்ற கணவன்..! அதுமட்டுமே..? பின்னர் அவரும்..! நடுங்க செய்யும் கொடூரம்...!



Husband killed wife and commit suicide near Kanchipuram

கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை கொடூரமா கொலை செய்துவிட்டு, கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் எண்ணைக்காரன் தெருவில் வசித்துவந்தவர் தேவிபிரசாத்(45). கார் ஓட்டுநராக வேலை பார்த்துவந்த இவருக்கு சரஸ்வதி (37) என்ற மனைவி இருந்துள்ளார். சரஸ்வதி வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.

தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் வேலை இல்லாமல் வீட்டில் இருந்த தேவிபிரசாத் கடும் மனஅழுத்ததில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் கணவன் மனைவி இருவருக்கும் சண்டை வந்த நிலையில், கோவத்தின் உச்சிக்கே சென்ற தேவிபிரசாத், தனது மனைவியின் கை, கால்களை கட்டிபோட்டுவிட்டு, சுத்தியலால் அவரது தலையில் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

Crime

பின்னர் தானும் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார் தேவிபிரசாத். இதனை அடுத்து நீண்டநேரமாகியும் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராதநிலையில் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.